மேலும் செய்திகள்
5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் அதிரடி கைது
03-Jun-2025
புதுச்சேரி; வில்லியனுார், முத்துப்பிள்ளைப்பாளையம், சண்முகம் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன், 50; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வில்லியனுாரில் இருந்து புதுச்சேரிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த ஆரியப்பாளையத்தைச் சேர்ந்த உதயசந்திரன் என்பவர் ஒட்டி வந்த பைக், ராஜசேகரன் பைக் மீது மோதியது.படுகாயமடைந்த ராஜசேகரனை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-Jun-2025