உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஜிப்மரில் உலக சுற்றுச்சூழல் தின விழா

 ஜிப்மரில் உலக சுற்றுச்சூழல் தின விழா

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் மரக்கன்று நடும் இயக்கத்துடன், உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை, ஜிப்மர் கல்வி முதல்வரும், பொறுப்பு இயக்குநருமான விக்ரம் கடே மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார். துணை இயக்குநர் ரங்கபாஷ்யம், திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம்ராஜன், மூத்த நிதி ஆலோசகர் வர்ஷிணி அருண், மூத்த நிர்வாக அலுவலர் ஹவாசிங், ஜிப்மர் தோட்டக்கலை கண்காணிப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பலர் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை, ஜிப்மர் தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை