மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
16-Feb-2026
புதுச்சேரி: உலக செவித்திறன் தினத்தையொட்டி, புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் தேசிய காதுகேளாமை தடுப்பு பிரிவு ஆகியன சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், குறை தீர்ப்பு அதிகாரி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு அதிகாரி ஷர்மா, காது கேளாண்மை தடுப்பு பிரிவு திட்ட அலுவலர் ஸ்டாலின் சிவகுருநாதன், காது, மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். நர்சிங் படிக்கும் மாணவர்கள், செவித்திறன் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கடற்கரை சாலை வழியாக சென்று, சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
16-Feb-2026