ரகளை செய்த வாலிபர் கைது
புதுச்சேரி : கடை வீதியில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் அய்யப்பன், 29. இவர் நேற்று முன்தினம் மாலை லாஸ்பேட்டை தனியார் ஒட்டல் எதிரில் உள்ள கடை வீதியில், மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்டார். தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அய்யப்பனை கைது செய்தனர்.