உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

 கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். வில்லியனுார், கோபாலன் கடை அருகில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக, வில்லியனுார் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று, கத்தியுடன் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், கோபாலன் கடை பகுதியை சேர்ந்த சரண், 25, என்பது தெரியவந்தது, அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து,போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை