மேலும் செய்திகள்
தமிழக பவுலர்கள் அசத்தல்: கூச் பெஹார் டிராபியில்
28-Nov-2024
தேனி: கூச் பெஹர் டிராபி காலிறுதியில் சித்தார்த் சதம் கடந்து கைகொடுக்க தமிழக அணி முதல் இன்னிங்சில் 281 ரன் எடுத்தது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கூச் பெஹர் டிராபி (4 நாள் போட்டி) தொடர் நடத்தப்படுகிறது. தேனியில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) அகாடமி மைதானத்தில் நடக்கும் காலிறுதியில் தமிழகம், பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தமிழக அணிக்கு ராகவ் (7), அக்சய் (5) ஏமாற்றினர். நவின் (26), கேப்டன் அபினவ் கண்ணன் (25) ஆறுதல் தந்தனர். அபாரமாக ஆடிய ஆன்ட்ரி சித்தார்த், 106 பந்தில் 108 ரன் (2 சிக்சர், 15 பவுண்டரி) விளாசினார். அம்பிரிஷ் (34), கிஷோர் (27), சச்சின் (20*) ஓரளவு கைகொடுத்தனர். தமிழக அணி முதல் இன்னிங்சில் 281 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பஞ்சாப் சார்பில் கர்வ் குமார் 3, சுபம் ராணா 2 விக்கெட் வீழ்த்தினர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய பஞ்சாப் அணிக்கு வரிந்தர் சிங் (4), கேப்டன் விஹான் (10), பர்வ்ஜோத் (15), கர்வ் குமார் (4) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்திருந்தது. அம்ரித்பால் சிங் (6), ராகுல் குமார் (15) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் கிஷோர் 2, சச்சின், ஹெம்சுதேஷன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
28-Nov-2024