உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: இளம் இந்தியா அபாரம்

கால்பந்து: இளம் இந்தியா அபாரம்

கொழும்பு: தெற்காசிய கால்பந்து (17 வயது) முதல் லீக் போட்டியில் இந்திய அணி 6-0 என மாலத்தீவை வென்றது. இலங்கையின் கொழும்புவில், 17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 7 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி 'பி' பிரிவில் மாலத்தீவு, பூடான் உள்ளிட்ட அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் மாலத்தீவை எதிர்கொண்டது. இந்திய அணிக்கு காங்டே (12) முதல் கோல் அடித்தார். அடுத்து மானாவதி (29) கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் இந்திய அணிக்கு டவுன்கெல் (49), கன்லெய்பா (59), நஜார் (86) தலா ஒரு கோல் அடித்தனர். 68 வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் காங்டே இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை