உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆனந்த்-காஸ்பரோவ் மோதல் * 30 ஆண்டுக்குப் பின்...

ஆனந்த்-காஸ்பரோவ் மோதல் * 30 ஆண்டுக்குப் பின்...

செயின்ட் லுாயிஸ்: செஸ் ஜாம்பவான்கள் ஆனந்த், காஸ்பரோவ் 30 ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளனர்.அமெரிக்காவில் முன்னாள் உலக சாம்பியன்கள் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 55, ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 62, மோதும் 'கிளச்' செஸ் தொடர் நடக்கிறது. நவீன மயமாக்கப்பட்ட செயின்ட் லுாசியா செஸ் கிளப்பில் மூன்று நாள் நடக்கும் இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 1.28 கோடி. 30 ஆண்டுசெஸ் அரங்கில் ஆனந்த் ஐந்து முறை (2000, 2007, 2008, 2010, 2012), காஸ்பரோவ் ஆறு முறை (1985, 1986, 1987, 1990, 1993, 1995) உலக சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினார். கடைசியாக 1995ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் மோதினர். நியூயார்க்கின் பழைய உலக வர்த்தக மையத்தின் 107வது மாடியில் இருவரும் மோதிய இப்போட்டியில் காஸ்பரோவ் சாம்பியன் ஆனார். இதன் பின் 2004ல் காஸ்பரோவ் ஓய்வு பெற்று விட்டார். அவ்வப்போது போட்டிகளில் பங்கேற்கும் ஆனந்த், உலகத் தரவரிசையில் தற்போது 13வது இடத்தில் உள்ளார். தற்போது 30 ஆண்டுக்குப் பின் இருவரும் மீண்டும் மோதுகின்றனர். போட்டி எப்படிதினமும் நான்கு போட்டி நடக்கும். முதல் நாளில் வெற்றி பெறும் ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். இரண்டாவது நாளில் வெற்றி பெறும் போட்டிக்கு 2, மூன்றாவது நாளில் வென்றால் 3 புள்ளி என வழங்கப்படும்.மொத்தம் 12 போட்டி முடிவில் முதலிடம் பெறும் வீரருக்கு ரூ. 62 லட்சம் பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெற்றால் ரூ. 44 லட்சம் தரப்படும். ஒருவேளை இருவரும் சம புள்ளி பெற்றால், தலா ரூ. 53 லட்சம் என சமமாக வழங்கப்படும். தவிர, ஒவ்வொரு போட்டிக்கும் போனஸ் பரிசு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ