உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / புரோ கபடி: ஜெய்ப்பூர் ஏமாற்றம்

புரோ கபடி: ஜெய்ப்பூர் ஏமாற்றம்

விசாகப்பட்டனம்: புரோ கபடி லீக் போட்டியில் ஏமாற்றிய ஜெய்ப்பூர் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.விசாகப்பட்டனத்தில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 16-9 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஜெய்ப்பூர் அணி 23 புள்ளி பெற்றது. ஆட்டநேர முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் 37-32 என்ற கணக்கில், 'நடப்பு சீசனில்' முதல் வெற்றியை பதிவு செய்தது. ஜெய்ப்பூர் அணிக்கு நிதின் குமார் (13) ஆறுதல் தந்தார். தெலுங்கு டைட்டன்ஸ் அணி சார்பில் கேப்டன் விஜய் மாலிக், 'ஆல்-ரவுண்டர்' பாரத் தலா 8 புள்ளி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை