உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்நிலை தொட்டி அமைக்க தண்ணீர்பந்தலில் கோரிக்கை

மேல்நிலை தொட்டி அமைக்க தண்ணீர்பந்தலில் கோரிக்கை

செய்யூர்:செய்யூர் அருகே சித்தாற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் எதிரே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி உள்ளது.இதுவே, கிராமத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாகும். கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய் இணைப்புகள் வாயிலாக, கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.பராமரிப்பு இல்லாமல் நாளடைவில், மேல்நிலைக் குடிநீர் தேக்கத்தொட்டியில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து பலவீனமாக உள்ளது.மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி முழுதும் இடிந்து, குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதற்கு முன், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய மேல்நிலைக் குடிநீர் தேக்கத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி