உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அழிவின் விளிம்பில் குளம் மறுவாழ்வுக்காக காத்திருப்பு

அழிவின் விளிம்பில் குளம் மறுவாழ்வுக்காக காத்திருப்பு

சித்தாமூர்: சித்தாமூர் பேருந்து நிறுத்தம் அருகே, 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த குளத்து நீரை அப்பகுதி மக்கள் குளிப்பதற்காகவும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக குளம் பராமரிப்பு இல்லாமல், குளத்தில் குப்பை தேங்கி, அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதனால், குளத்து நீரை மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. சித்தாமூர் மையப்பகுதியில் தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தம் அருகே, மாசடைந்து அலங்கோலமாக காட்சி அளிக்கும் குளம், காண்போரை முகம்சுளிக்கச் செய்கிறது.கடந்த ஆண்டு பிப்., மாதம் சாலை விரிவாக்க பணிக்காக, குளத்தின் இரண்டு கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.இந்நிலையில் மீண்டும் குளக்கரை ஆக்கிரமித்து கட்டடங்கள் அமைக்க வாய்ப்பு உள்ளதால், அழியும் நிலையில் உள்ள சித்தாமூர் குளத்தை மீட்க, சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், குளத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை