உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாம்பு கடித்து 9 வயது சிறுமி பலி

பாம்பு கடித்து 9 வயது சிறுமி பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலமையூர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம், 45. இவரது மகள் தர்ஷினி, 9. கடந்த 24ம் தேதி இரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது. அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி