உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அம்மணம்பாக்கம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

அம்மணம்பாக்கம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

மறைமலைநகர்,:செங்கல்பட்டு அருகில், அம்மணம்பாக்கம் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதால், சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வல்லம் ஊராட்சி, அம்மணம்பாக்கம் - திருப்போரூர் கூட்டுச்சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை வழியாக மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல முடியும். இந்த சாலையில், அம்மணம்பாக்கம் சுடுகாடு பகுதியில் இருந்து திருப்போரூர் சாலை இணைப்பு வரை, சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகனங் களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகி வருகின்றன. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக, கடுமையாக சேதமடைந்து உள்ளது. வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராவதால், உரிய நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால், இரவில் இந்த சாலையில் செல்லும் போது அச்சமாக உள்ளது. அடிக்கடி இந்த சாலையில், மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிப்பு போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த சாலையில் ஒருபுறம் காப்புக்காடுகள் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்க அனுமதி அளிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, அனைத்து தரப்பினரின் சிரமத்தை உணர்ந்து, அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ