உள்ளூர் செய்திகள்

 புதரில் பற்றிய தீ

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, மணமை ஊராட்சிப் பகுதியில் உள்ள, பொதுப்பணித்துறை ஏரிக்கரைப் பகுதியில், சிறிய பனை மரங்கள் வளர்ந்து, புதர் சூழ்ந்துள்ளது. இளந்தோப்பு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள மயான பகுதியிலும், புதர் சூழ்ந்துள்ளது. கோடைவெயிலில் புதர் கருகியுள்ள நிலையில், இரண்டு பகுதிகளிலும், நேற்று மதியர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்தமாமல்லபுரம் தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைத்தனர். புகைபிடித்தவர் நெருப்பை வீசியெறிந்து தீப்பற்றியிருக்கலாம் என, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !