உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முகூர்த்த நாள் எதிரொலி கந்தசுவாமி கோவிலில் குவிந்த கூட்டம்

முகூர்த்த நாள் எதிரொலி கந்தசுவாமி கோவிலில் குவிந்த கூட்டம்

திருப்போரூர்,:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விசேஷ நாட்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த வகையில் முகூர்த்த நாளான நேற்று, கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.பக்தர்கள், சரவணபொய்கை குளத்தில் நீராடி, சுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். அதேபோல், கோவில் வளாகத்தில் நடந்த திருமணங்களால் மணமக்கள், உறவினர்கள் என, மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், திருப்போரூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் திருமணம் முடித்தோரும் கோவிலுக்கு வந்து, சுவாமியை வழிபட்டுவிட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை