நீரில் மூழ்கி இன்ஜினியர் பலி
புதுப்பட்டினம்: உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அமன் மிஸ்ரா, 30. இவர், கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையத்தில் உதவி இன்ஜினியராக, பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, அப்பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். கல்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.