உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்குவாரி பள்ளத்தில் ஆண் சடலம் மீட்பு

கல்குவாரி பள்ளத்தில் ஆண் சடலம் மீட்பு

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில், கைவிடப்பட்ட கல்குவாரி பள்ளம் உள்ளது.தற்போது அந்த பள்ளத்தில், தண்ணீர் நிரம்பி உள்ளது. இதில் நேற்று, 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, பொது மக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்த யார், பள்ளத்தில் குளிக்க வந்து தவறி விழுந்து இறந்தாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா, வேறு காரணமாக என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ