மேலும் செய்திகள்
செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
11-Oct-2025
மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி ஜி.எஸ்.டி., சாலை தாம்பரம் மார்க்கத்தில், தலையில் அடிபட்டு இறந்த நிலையில், சாலை மைய தடுப்பில் ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் சென்னை பட்டாபிராம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மோசஸ்ஜெபசிங், 37, என தெரிந்தது. 'டாடா ஏஸ்' வாகனம் ஓட்டி வந்த இவர், நேற்று முன்தினம் ஜி.எஸ்.டி., சாலையில் சென்ற போது விபத்து ஏற்பட்டு, தலையின் பின்பக்கம் காயம் ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்து இறங்கி சாலை மைய தடுப்பில் அமர்ந்த போது உயிரிழந்தது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து, பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
11-Oct-2025