உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுகாதார நிலையத்திற்கு ரூ.1.50 கோடியில் புது கட்டடம்

சுகாதார நிலையத்திற்கு ரூ.1.50 கோடியில் புது கட்டடம்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தினமும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு போதிய இடவசதியின்றி, கட்டடமும் பழுதடைந்து இருந்தது. எனவே, சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, சுற்றுப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் காரணமாக, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தரைத்தளம், முதல் தளம் கொண்ட புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை