உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவிலில் விபத்தில் ஒருவர் பலி

சிங்கபெருமாள் கோவிலில் விபத்தில் ஒருவர் பலி

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவிலில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் சென்னை மார்க்கத்தில், நேற்று அதிகாலை 5:30 மணியளவில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்துள்ளது. இதுகுறித்து, மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் மற்றும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை