உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை

மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை

மாம்பாக்கம்:மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில், நாளை காலை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.இதனால், மாம்பாக்கம் உள்ளிட்ட எட்டு இடங்களில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் வினியோகம் தடை செய்யப்படும் என, அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்நாடு மின் வினியோக கழகம், மறைமலை நகர் கோட்டம், செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் கோட்டம், மாம்பாக்கம் 110/33-11 கே.வி.துணை மின் நிலையத்தில், நாளை காலை, மாதாந்திர அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.இதனால், மாம்பாக்கம் ஒரு பகுதி, கொளத்துார், கண்ணாபுரம், கீழ்கோட்டையூர், மேல்கோட்டையூர், கண்டிகை, வெம்பாக்கம் மற்றும் ரத்தினமங்கலம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை