உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலுார் சாலையில் வேகத்தடைகளுக்கு வெள்ளை வண்ணம் பூச கோரிக்கை

பாலுார் சாலையில் வேகத்தடைகளுக்கு வெள்ளை வண்ணம் பூச கோரிக்கை

மறைமலை நகர்,பாலுார் சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை வண்ணம் பூச வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிங்கபெருமாள் கோவில் - பாலுார் சாலை, 13 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை பாலுார், ரெட்டிபாளையம், வெண்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் ரெட்டிபாளையம், பாலுார் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைக்கு லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள், அதிக அளவில் இச்சாலையில் சென்று வருகின்றன.செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலையாக உள்ள இந்த சாலையில், கொளத்துார் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வேகத்தடைகள் உள்ளன.இந்த வேகத்தடைகளில் வெள்ளை வண்ணம் பூசாமல் இருப்பதால், இரவு நேரங்களில் புதிதாக இந்த வழியே வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. அதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கொளத்துார், வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் மதுபிரியர்கள், இந்த வேகத்தடைகளால் விபத்தில் சிக்கி, அடிக்கடி காயமடைகின்றனர்.இந்த வேகத்தடைகளில் இரவில் ஒளிரும் விளக்குகள் மற்றும் வண்ணம் பூச, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை