மேலும் செய்திகள்
போரூர் கிராம சாலையை சீரமைக்க வேண்டும்
23-Oct-2025
பவுஞ்சூர்: சேதமடைந்துள்ள கொடூர் சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். பவுஞ்சூர் அடுத்த ஆக்கினாம்பட்டு கிராமத்தில் இருந்து கொளத்துார் வழியாக, கொடூர் கிராமத்திற்கு செல்லும், 3 கி.மீ., துார தார் சாலை உள்ளது. இதை கொளத்துார், மாலச்சேரி, வேட்டகாரகுப்பம், கொடூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இச்சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்த செல்கின்றன. ஆக்கினாம்பட்டு சுற்றுவட்டார பகுதியில் நான்கு கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்படுவதால், இந்த சாலையில் நுாற்றுக்கணக்கான லாரிகள் அதிக பாரங்கள் ஏற்றிச் செல்கின்றன. இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களால் சிக்கி, விபத்துக்கு உள்ளாகின்றனர். ஆகையால், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
23-Oct-2025