உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவடிசூலம் சாலையை சீரமைக்க கோரிக்கை

திருவடிசூலம் சாலையை சீரமைக்க கோரிக்கை

மறைமலைநகர், செங்கல்பட்டு அருகில் திருவடிசூலம் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளதை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம் - திருவடிசூலம் சாலை 3 கி. மீ., உள்ளது. இந்த சாலையை திருவடிசூலம், குண்ணவாக்கம், பட்டரவாக்கம் ஈச்சங்கரணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை திருப்போரூர் - - செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் மற்றும் இந்த பகுதியில் உள்ள சிவன் கோவில், அம்மன் கோவில், பைரவர் கோவில்களுக்கு அதிகளவில் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலை வேலைக்கு செல்வோர் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகின்றனர். இந்த சாலையின் இருபுறமும் காப்புகாடுகள் உள்ள பகுதியில் சாலை குறுகலாகவும், சாலை ஓரம் அதிக அளவில் பள்ளங்கள் உள்ளன. இதனால் கோவிலுக்கு வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவசர காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்து வந்தது. அடிக்கடி நடைபெறும் சிறு சிறு விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் விளக்குகள் இல்லாததால் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இந்த சாலை ஓர பள்ளங்களை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ