சென்னையில் போலீசாரை தாக்கியவருக்கு காப்பு
சென்னை, ஓட்டேரியில், போலீசாரை தாக்கியவர் நேற்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை, ஓட்டேரி, ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில், கடந்த 20ம் தேதி மது போதையில் இருந்த இருவர், போலீசாரை தாக்கி தப்பினர். இந்த வழக்கில், ஓட்டேரியைச் சேர்ந்த முஸ்தபா, 26, என்பவரை, ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.