உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லண்டனில் பனிப்புயல் சென்னை விமானம் தாமதம்

லண்டனில் பனிப்புயல் சென்னை விமானம் தாமதம்

சென்னை, இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் விமான நிலையத்தில் இருந்து, சென்னைக்கு வரும் 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம், 287 பயணியருடன் நேற்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறக்க துவங்கிய உடன் வானிலை மோசமடைந்தது. உடனே, விமானி மீண்டும் லண்டன் விமான நிலையத்திற்கு தரை இறக்கினார்.பொதுவாக 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம், அதிகாலை 5:35 மணிக்கு சென்னைக்கு வந்து விட்டு, சென்னையில் இருந்து காலை 7:35 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும்.ஆனால், லண்டனில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நேற்று ஆறு மணி நேரத்திற்கு மேல் தாமதமானது. முற்பகல் 11:30 மணி அளவில் சென்னைக்கு வந்து, பின், பகல் 1:30 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.இதனால், சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய 280 பயணியர், வேறுவழியின்றி காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி