உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கார்டு திருத்தம் நாளை சிறப்பு முகாம்

ரேஷன் கார்டு திருத்தம் நாளை சிறப்பு முகாம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம், அந்தந்த தாலுகாக்களில் நடக்கிறது.கீழ்கண்ட கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம், நாளை 8ம் தேதி நடக்கிறது. இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து தங்களது ரேஷன் கார்டில் தேவையான திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்த புகார்களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் இடங்கள்

தாலுகா கிராமம்செங்கல்பட்டு பெரியபுத்ததேரிமதுராந்தகம் அனந்தமங்கலம்செய்யூர் புத்திரன்கோட்டைதிருக்கழுக்குன்றம் அன்னை சத்யா நகர்திருப்போரூர் இடர்குன்றம்வண்டலுார் ரத்தினமங்கலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை