சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மதுராந்தகம்:சிலாவட்டம் ஊராட்சியில்,'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. மதுராந்தகம் அருகே சிலாவட்டம் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி தலைமையில் நேற்று நடந்தது. இதில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன. வீட்டுமனைப் பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, மின் இணைப்பு, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மக்கள் வழங்கினர். நேற்று நடந்த முகாமில், 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப் பட்டன.