உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆட்சீஸ்வரர் கோவிலில் வைகாசி சனி பிரதோஷம்

ஆட்சீஸ்வரர் கோவிலில் வைகாசி சனி பிரதோஷம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், இளங்கிளி அம்மன் சமேத ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு நேற்று, வைகாசி மாத சனி பிரதோஷ வழிபாடு, வெகு விமரிசையாக நடந்தது.நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், உள்ளிட்டவற்றால், அபிஷேகம் செய்யப்பட்டது.வெள்ளிக்கவசம் அணிவித்து, கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மஹா தீபாராதனை நடந்தது.இதைத்தொடர்ந்து, நந்தி வாகனத்தில் ஆட்சீஸ்வரரும், இளங்கிளி அம்மனும், கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து, அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை