உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பறவைகளின்றி வெறிச்சோடிய வேடந்தாங்கல் சரணாலயம்

பறவைகளின்றி வெறிச்சோடிய வேடந்தாங்கல் சரணாலயம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பறவைகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்டது. தற்போது, ஏரியில் 4 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. வங்கதேசம், மியான்மர், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்கின்றன. பின், மீண்டும் தங்கள் நாடுகளுக்கு புறப்பட்டுச் செல்கின்றன. குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் பறவைகள் இங்கு வரத் துவங்கும். ஆனால் தற்போது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், 100க்கும் குறைவான பறவைகளே உள்ளன. ஏரியில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளதால், பறவைகள் வரத்து குறைந்திருக்கலாம் என, பறவைகள் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். எனவே, ஏரிக்கு நீர் வரத்து வரும் கால்வாய்களை முறையாக துார்வாரி சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி