உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேம்பால பணியால் குழாய் உடைப்பு சாலையில் பெருக்கெடுத்த குடிநீர்

மேம்பால பணியால் குழாய் உடைப்பு சாலையில் பெருக்கெடுத்த குடிநீர்

மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில், சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் இடையிலான ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த பகுதியில், செங்கல்பட்டு மார்க்கத்தில், பூமிக்கு அடியில் கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் நகராட்சிகளுக்கு, பாலாற்று குடிநீர் வழங்கும் சிமென்ட் குழாய்கள் செல்கின்றன.நேற்று மாலை, மேம்பால பணிகளுக்காக இந்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாய்கள் உடைந்து, தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.தொடர்ந்து, சாலையில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.போக்குவரத்து பணியில் இருந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, வால்வுகளை மூடி குழாய்களில் வரும் குடிநீரை நிறுத்தினர்.தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, சாலையில் தேங்கிய தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்தப்பட்டது. குழாய் உடைப்பால், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ