மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்கள் என, தொடர்ந்து விடுமுறையாக அமைந்தது. பள்ளிகளுக்கும் செப்., 26ம் தேதி முதல் நேற்று வரை, காலாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனால், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர் மாமல்லபுரத்தில் குவிந்து, சுற்றுலா களைகட்டியது.