உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் மீது கன்டெய்னர் மோதி மனைவி பலி கணவர் காயம்

பைக் மீது கன்டெய்னர் மோதி மனைவி பலி கணவர் காயம்

பூந்தமல்லி பூந்தமல்லி அருகே, பைக் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார். கணவர் காயமடைந்தார். பூந்த மல்லி அருகே உள்ள திருமழிசையை சேர்ந்தவர் ராமு, 57. இவரது மனைவி உஷா, 47. இருவரும், நேற்று முன்தினம் இரவு, பூந்தமல்லியில் இருந்து 'ஸ்பிளண்டர்' பைக்கில் வீ ட்டிற்கு சென்றனர். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியை கடந்து சென்ற போது, பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, அவர்களின் பைக் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே பலியானார். ராமு காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலி ன்படி சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநரான, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோயப் அக்தர், 28, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி