விடுபட்ட பகுதியிலும் சாலை அமைக்கப்படுமா?
வண்டலுார்:வண்டலுார் ஊராட்சி, தாங்கல் ஏரிக்கரை சாலை 300 மீ., நீளம், 15 அடி அகலம் உள்ளது. நடக்கவே லாயக்கற்ற நிலையிலிருந்த சாலையை புனரமைக்க, கடந்த இரு ஆண்டுகளாக கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த ஜனவரியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், 150 மீ., துாரத்திற்கு மட்டும் சாலை அமைக்கப்பட்டு, மீதி 150 மீ., துார சாலை கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே, மீதமுள்ள 150 மீ., துாரத்திற்கு சிமென்ட் சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.