உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாட்டரி வழக்கு பெண் கைது

லாட்டரி வழக்கு பெண் கைது

செங்கல்பட்டு, செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக, போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, கடந்த 3ம் தேதி, செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி சையது இப்ராஹிம், 40, என்பவரை கைது செய்து நடத்திய விசாரணையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.இதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுஜிதா, 39. என்பவரை, நேற்று கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ