உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்போர்ட் விரிவாக்க திட்டம் அரசு அதிகாரிகள் ஆலோசனை

ஏர்போர்ட் விரிவாக்க திட்டம் அரசு அதிகாரிகள் ஆலோசனை

சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு வரும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில், விமான நிலையங்களின் ஆணைய உயரதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்க திட்டங்கள் குறித்து, தமிழக அரசு உட்பட பல துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அதில், தமிழக தொழில் துறை செயலர் அருண் ராய், 'டிட்கோ' மேலாண் இயக்குனர் சந்தீப் நந்துாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கூட்டத்தில், சென்னை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட விரிவாக்க திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கு, தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ