உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருக்குறள் கற்பிப்பது குற்றமா: -பா.ஜ., கேள்வி

திருக்குறள் கற்பிப்பது குற்றமா: -பா.ஜ., கேள்வி

சென்னை: 'தமிழகத்தில் திருக்குறள் கற்பிப்பது குற்றமா' என, பா.ஜ., மாநிலச் செயலர் அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னை, அசோக் நகர் அரசு பள்ளியில் சொற்பொழிவாளர் ஒருவர், 'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' என்ற திருக்குறளுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட ஆசிரியர் ஒருவர், மறுபிறவி தத்துவம் குறித்து இங்கு பேசக்கூடாது என்று சர்ச்சைக்குரிய விதத்தில், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.அதைத் தொடர்ந்து, அந்த சொற்பொழிவாளர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க., அரசின் இந்த நடவடிக்கை, தமிழகத்தில் திருக்குறள் போதிப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.அறத்துப்பால் முழுதும் பல இடங்களில் மறுபிறவி தத்துவங்களை திருவள்ளுவர் பேசுகிறார். 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்' என்கிறார். 'எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்' என்கிறார். அதற்காக மறுபிறவி தத்துவத்தை போதிக்கிற திருக்குறளை பாடநுால்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று, நாளை யாரும் வற்புறுத்தினால் அவர்கள் குரலுக்கு தி.மு.க., அரசு செவி சாய்த்து, திருக்குறளை பாடநுால்களில் இருந்து நீக்குமா? அதை நோக்கித்தான் தி.மு.க., அரசு செல்கிறதா? திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலம் என்று சொன்ன ஈ.வெ.ரா.,வின் கருத்தில் தி.மு.க., உடன்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட சொற்பொழிவாளரை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கர் என்பவரின் இயற்பெயர் அந்தோணி பர்ணாந்து என தகவல் பரவி இருக்கிறது. அப்படியென்றால், அவர் மதரீதியில் தான், சொற்பொழிவாளரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளாரோ என சந்தேகம் எழுகிறது. அதனால், போலீசார் இந்த கோணத்திலும் பிரச்னை குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட ஆசிரியர் அப்படிப்பட்ட எண்ணத்தோடு செயல்பட்டிருந்தால், விசாரணைக்குப் பின் அதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Jesu Raj
செப் 09, 2024 08:12

திருக்குறளில் என்ன ஏழு பிறப்பும் மனித பிறப்பு தான் என்று எழுதி இருக்கிறதா இல்ல திமுக கட்சிகள் சொல்லி இருக்கா இல்ல ஈவேரா எப்படி பேசி இருக்காரா முதலில் எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் இது அரசியல் மேடை அல்ல அவர் பேசியது ஒரு பள்ளியில் அங்கு அப்படி பேசக்கூடாது என்பது தான் கருத்து


Just imagine
செப் 08, 2024 13:08

அறத்தோடு ஒருமனிதன் இப்படித்தான் தனிமனித ஒழுக்கம் , சமூக ஒழுக்கம் வாழவேண்டும் என்று கூறுவது திருக்குறள் .......... கட்டுப்பாடற்று எப்படியும் வாழலாம் தனிமனித ஒழுக்கம்யின்மை போதை /பலதாரம் , சமூக ஒழுக்கம்யின்மை ஊழல்/லஞ்சம் என்று சமூகத்தை மாற்றியது ....


Just imagine
செப் 08, 2024 13:30

ஆனியன் மாடல்


அப்பாவி
செப் 08, 2024 10:53

எல்லா குறளும் ஏற்புடையது அல்ல. வள்ளுவர் சொன்பதை கேக்வி கேட்கக் கூடாதுன்னு சட்டம் இல்லை. வள்ளுவர் எந்த இடத்திலேயும் நீ அழகா இல்லேன்னா போன ஜென்மத்து பாவம்னு சொல்லலை. அவருக்கே புரியாமல், அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியன் கேடும் நினக்கப் படும் சொல்லியிருப்பதை ஈண்டு நினைவில் கொள்க. ஒரு ஃப்ளோவில் அவரே எழுமை என்ன்று ஏழு பிறப்புக்களை சொன்னால் உடனே அவருக்கு மறுபிறவி மேல் நம்பிக்கை ந்னு அடிச்சி உடக் கூடாது.


தமிழ்வேள்
செப் 08, 2024 16:43

ஹலோ அடப்பாவி, பைபிள் குரான் இன் எல்லா பகுதிகளும் ஏற்புடையது அல்ல என்று பகிரங்கமாக சொல்ல துணிவு உண்டா? ஆப்ரஹாமிய அடிமை திமுகவுக்கு ஓவராக முட்டுக் கொடுக்க வேண்டாம்....


முக்கிய வீடியோ