உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவிலுக்கு வழி கேட்டவரிடம் பணம் பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை

கோவிலுக்கு வழி கேட்டவரிடம் பணம் பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை

சென்னை :மலேஷியாவில் உள்ள ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிபவர் மனோகரன். இவர், 2014ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்குச் சென்றார். அங்கிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து உள்ளார்.அப்போது, பேருந்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த வேலுார் மாவட்டம், காட்பாடி தாலுகா திருமணி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 21, என்பவரிடம், சென்னையில் உள்ள கோவில்களுக்கு செல்ல வழி கேட்டுள்ளார்.அதற்கு சந்தோஷ்குமார், அனைத்து கோவில்களுக்கும் தானே அழைத்து செல்வதாகக் கூறி உள்ளார். இதை நம்பிய மனோகரன், சந்தோஷ்குமாருடன் அரும்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார்.அப்போது, மனோகரனிடம் இருந்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில், அவரை சந்தோஷ்குமார் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த மனோகரன், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.இதுகுறித்து, அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து, சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன் நடந்தது.போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் அரசு வழக்கறிஞர் டி.சுரேஷ் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, 'சந்தோஷ்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளது என்பதால், அவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை