உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரபல பீட்சா கடையில் புகுந்து இருவரை வெட்டிய மாணவர்கள் கே.கே.நகரில் நள்ளிரவில் சம்பவம்

பிரபல பீட்சா கடையில் புகுந்து இருவரை வெட்டிய மாணவர்கள் கே.கே.நகரில் நள்ளிரவில் சம்பவம்

கே.கே.நகர், சென்னை, கே.கே.நகர் ராமசாமி சாலையில் பிரபல 'டாமினோஸ்' பீட்சா கடை செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 1:30 மணியளவில், கடையை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், கடைக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களிடம் 'டெலிவரி ஊழியர்களான அனீஸ் மற்றும் கவுசிக் எங்கே?' எனக் கேட்டு, தகராறில் ஈடுபட்டனர்.அவர்கள் இல்லை என, கடை ஊழியர்கள் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த அந்த நபர்கள், மணப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான விஜய் என்பவரை பீர் பாட்டிலால், தலையில் அடித்தனர்.மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஊழியரான பிரித்விராஜ் என்பவரின் தலை மற்றும் கையில் வெட்டி, மிரட்டி தப்பினர்.காயமடைந்த இருவரும், கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இந்த, தாக்குதலில் ஈடுபட்டது மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவர்களான, கே.கே.நகர், கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், 18, அசோக் நகர், 37வது தெருவை சேர்ந்த சஞ்சய், 18, அசோக் நகர், 85வது தெருவைச் சேர்ந்த சந்துரு, 19, மீனம்பாக்கம் தனியார் கல்லுாரி மாணவரான கே.கே.நகர் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த கிேஷார், 19, மற்றும் 17 வயது சிறுவர்கள் மூவர் உட்பட 7 பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்னையில், இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கூடுவாஞ்சேரியில் பதுங்கியிருந்த ஏழு பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Chand
ஜூன் 16, 2024 14:53

இது தான் திராவிட மாடல் .


Rajathi Rajan
ஜூன் 16, 2024 13:44

ஆம் இவர்களை மாணவர்கள் என்று கூற வேண்டாம்.. பிஜேபி ன் தொண்டர் என்ற குண்டர் படை என்ற உண்மையே ஊருக்கு உரைக்க சொல்லவும்...


Senthoora
ஜூன் 16, 2024 08:15

தயவு செய்து அவர்களை மாணவர்கள் என்று சொல்லவேண்டாம். காவாளிகள் என்று சொல்லுங்க.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ