எம்.ஓ.பி.வைஷ்ணவ் சதுரங்கத்தில் அசத்தல்
சென்னை, சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள் 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. மண்டல போட்டிகளில் வெற்றி பெற்ற இரு அணிகள், மண்டலங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பர்.அந்த வகையில் எம்.ஓ.பி.வைஷ்ணவ், எம்.சி.சி., - 'ஏ' மற்றும் 'பி' மண்டல இணைப்பு அணிகள் எதிர்கொண்டன. போட்டிகள் மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டன. மூன்று சுற்றுகளிலும் நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.எம்.சி.சி., - 'பி' மண்டல இணைப்பு அணி, 'ஏ' மண்டல இணைப்பு அணிகள், முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.