மழைக்கு முன் மின் கம்பம் மாற்றப்படுமா?
ஆவடி மாநகராட்சி, 40வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நான்காவது பிளாக்கில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள மின் கம்பம், பல மாதங்களாக சிதிலமடைந்த நிலையில், ஆபத்தான வகையில் காட்சி அளிக்கிறது. எனவே, சேதமடைந்த மின் கம்பத்தை வரும் பருவமழை காலத்திற்குள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சோமு, ஆவடி.