உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிகாலையில் பெண்ணிடம் கத்திமுனையில் வழிப்பறி

அதிகாலையில் பெண்ணிடம் கத்திமுனையில் வழிப்பறி

அரும்பாக்கம், n:விருகம்பாக்கம், சத்யா நகரைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 45. இவர், நேற்று முன்தினம், அரும்பாக்கத்தில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்று, அங்கிருந்து உறவினருடன் விருதாச்சலம் சென்றார்.பின், அனைவரும் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, அரும்பாக்கம் மெட்ரோ பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர். அங்கிருந்து, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது, ஜெயஸ்ரீ மட்டும் கால்வலி காரணமாக பொறுமையாக நடந்து வந்தார்.திடீரென ஜெயஸ்ரீயை வழிமறைத்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, கைப்பையை பறித்து தப்பினர். இது குறித்து, அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ