மேலும் செய்திகள்
காவலர் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 42 பேர் மனு
28-May-2025
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.முகாமில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி பங்கேற்று, பல்வேறு பிரிவுகளை சேர்ந்த, 1 உதவி கமிஷனர், 2 ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் உட்பட, 24 பேரிடம் மனுக்களை பெற்றார்.கொடுக்கப்பட்ட மனுக்களில் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்கள் இருந்தன.பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டார்.இம்முகாமில், துணை கமிஷனர் ஹரி கிரண் பிரசாத் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
28-May-2025