உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  எழும்பூர் ரயில் நிலையத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்

 எழும்பூர் ரயில் நிலையத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: எழும் பூர் ரயில் நிலையத்தில், நேற்று, 27 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திரா மாநிலம், காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் விரைவு ரயில் எழும்பூருக்கு நேற்று வந்தது. இதில் பயணித்த தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் பயணி சரஸ்வதி, 56, என்பவரின் பையில், 8 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்த போலீசார், பறிமுதல் கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல், தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து செங்கல் பட்டு செல்லும் விரைவு ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில், யாரும் உரிமை கோராத பேக்கில், அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதில், 9.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ளள, 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வாரந்திர சிறப்பு விரைவு ரயில், நேற்று முன்தினம் இரவு 8:25 மணிக்கு, எழும்பூர் வந்தது. இதில் வந்த பயணியை சோதித்த ரயில்வே பாதுகாப்பு படையினர், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பு கஞ்சாவை கடத்தி வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நசீம், 32, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை