/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் இஞ்சினில் மின் கம்பி உடைந்தது கும்மிடி மார்க்கத்தில் சேவை பாதிப்பு
ரயில் இஞ்சினில் மின் கம்பி உடைந்தது கும்மிடி மார்க்கத்தில் சேவை பாதிப்பு
எண்ணுார், எண்ணுார் ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை 4:00 மணிக்கு, அத்திப்பட்டில் இருந்து சென்னை நோக்கி, ரயில் இஞ்சின் ஒன்று சென்று கொண்டிருந்தது.திடீரென, ரயில் இஞ்சினின் மின்சாரம் கடத்தும், 'பான்டோகிராப்' கம்பி உடைந்து, உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கியது. இது குறித்து தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள், சம்பவ இடத்தில் முகாமிட்டனர். மாற்று இஞ்சின் வரவழைக்கப்பட்டு, பழுதான ரயில் இஞ்சின் இழுத்து செல்லப்பட்டது.மேலும், உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிய பான்டோகிராப் கம்பி அகற்றப்பட்டது. இதனால், கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் போக்குவரத்து, ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. மாலை 5:30 மணிக்கு பின், நிலைமை சீரடைந்தது.