தலைமறைவு குற்றவாளி சிக்கினார்
சாஸ்திரி நகர்:பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் வினோ, 29. கடந்த 2023ம் ஆண்டு, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். கடந்த மாதம், இவரை பிடிக்க நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, வெளி மாநிலத்தில் தலைமறைவாக இருந்த இவரை, நேற்று போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.