உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டேங்க், பேனர் கம்பத்தில் ஏறி சகோதரர்கள் தற்கொலை மிரட்டல்

டேங்க், பேனர் கம்பத்தில் ஏறி சகோதரர்கள் தற்கொலை மிரட்டல்

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த காலவாக்கம் ஓ.எம்.ஆர்., சாலையோரத்தை ஆக்கிரமித்து, சில வீடுகள் உள்ளன. நேற்று காலை இந்த வீடுகளை இடிக்க, போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினர், திருப்போரூர் வட்டாட்சியர் தலைமையில் துறையினர் அப்பகுதிக்கு சென்றனர்.ஆனால், வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசிக்கும் ராஜலிங்கம் என்பவரது மகன் தினேஷ், அங்கிருந்த 60 அடி உயர ராட்சத விளம்பர பேனர் கம்பம் மீது ஏறி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.அவருடைய சகோதரர் மதேஷ் என்பவர், அங்கிருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.இதனால், ஓ.எம்.ஆர்., சாலையில் மேற்கண்ட இரண்டு இடத்திலும் அப்பகுதி மக்கள், சாலையில் பயணித்தோர் குவிந்தனர். இதையடுத்து, வருவாய் துறையினர், சம்பந்தப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு அருங்குன்றம் ஊராட்சியில் இடம் ஒதுக்கி, சம்பவ இடத்திலேயே பட்டா ஆவணம் வழங்கினர். வீடுகளை காலி செய்ய, 10 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டது.இதையடுத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சகோதரர்கள், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கீழே இறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை