உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகன் தாக்கியதில் கார் ஓட்டுனர் பலி

மகன் தாக்கியதில் கார் ஓட்டுனர் பலி

அசோக் நகர்,மேற்கு மாம்பலம், விநாயகம் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 43; கார் ஓட்டுனர். இவரது மனைவி தேவி, 35. தம்பதியின் மகன் சுனில்குமார் மற்றும் ஒரு மகள் உள்ளார்.வெங்கடேஷ் நேற்று முன்தினம் மது போதையில், படிக்கட்டில் ஏறிய போது நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.வெங்கடேஷின் உறவினர்கள், குடும்பத்தினரே அவரை அடித்துக் கொன்றதாக தகராறு செய்தனர். சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசார்விசாரித்தனர்.விசாரணையில், வெங்கடேஷ் மது போதையில், தினமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது வெங்கடேஷ் மனைவியை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் சுனில் குமார் பிளாஸ்டிக் குழாயால் தந்தையின் தலையில் தாக்கியதில், அவர் இறந்தது தெரியவந்தது.இதையடுத்து, சுனில்குமாரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ