உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாலில் போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு

மாலில் போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு

சென்னை, டஅண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தொழில்நுட்ப பிரிவினர், ராயப்பேட்டையில் உள்ள பிரபல மால் முன் நேற்று முன்தினம் அ.தி.மு.க., போராட்டம் நடத்தினர்.இந்த சம்பவம் குறித்து, சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், பிற நபர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் செய்தல், பிறரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட, ஐந்து பிரிவுகளின் கீழ், அண்ணா சாலை போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர். போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகளை வைத்து, அதில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியிலும், போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ