உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மீட்கப்பட்ட ரூ.200 கோடி நிலத்தில் சிறுவர் பூங்கா

 மீட்கப்பட்ட ரூ.200 கோடி நிலத்தில் சிறுவர் பூங்கா

அடையாறு மண்டலம், சத்யா நகரில் 226 குடிசைகளில் வசித்த வர்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி கோட்டூர்புரம், பெரும்பாக்கம் பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் யாருக்கும் தெரியாமல் இந்த இடத்தில் வேலி அமைத்ததுடன், ரங்கராஜபுரம் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இணைப்பையும் துண்டித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக பட்டா பெற்று சிலர் தங்களுக்கு சொந்தமானது என கூறி வந்தார்கள். மாவட்ட கலெக்டர் உத்தரவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, தற்போது அரசுக்கு சொந்தமானது என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில், மாநகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா நீர்நிலைகள் அமைக்கப்படும். - சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ